வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு!
போபால்: சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சிக்கல்களில் சிக்கிய போபால் லோக்சபா தொகுதி, பாஜக வேட்பாளரும், பெண் சாமியாருமான, பிரக்யா சிங், மவுன விரதம் மேற்கொண்டுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம், மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரக்யா சிங். பெண் சாமியாரான இவர், தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
சமீபத்தில் முடிந்த லோக்சபா தேர்தலில், இவர், மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, பிரசாரம் செய்வதற்கு, பிரக்யாவுக்கு, தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்தது.

தேசபக்தர்
அதற்கு பிறகும் சர்சைக்குரிய வகையில் பேசுவதை நிறுத்தவில்லை பிரக்யா சிங். நாதுராம் கோட்சே குறித்து கமல் பேசியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்றார் பிரக்யா.

மோடி காட்டம்
இது பெரும் சர்ச்சையாய் வெடிக்க எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பா.ஜ.கவும் கண்டனம் தெரிவித்தது. பிரதமர் மோடி பிரக்யா சிங் பேசியதை ஒரு போதும் ஏற்க முடியாது என காட்டமாக கூறினார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மீண்டும் மன்னிப்பு
இப்படி வாயை திறந்தாலே பிரச்சனையாவதை உணர்ந்த பிரக்யா மவுன விரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
தேர்தல் முடிந்து விட்டது. ஆத்ம பரிசோதனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. தேர்தல் பிரசாரத்தின் போது, என் பேச்சு, தேச பக்தர்கள் மனதை புண்படுத்தியிருந்தால், அதற்காக, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.
|
கடும் தவம்
பொது சேவைக்கான நல்லொழுக்கத்தின்படியும், செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையிலும், 63 மணி நேர மவுன விரதமும், கடும் தவமும் இருந்து வருகிறேன். இவ்வாறு, பிரக்யா சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் அவர் தனது மவுன விரதத்தை முடிக்கவுள்ளார்.

மோடி தியானம்
தேர்தல் பிரச்சாரம் முடிந்த மறு நாளே பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள பனிக்குகையிவ் 18 மணி நேரம் அவர் தியானம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications