”நல்லா அள்ளி சாப்டுப்பா” – "அப்பா" மாதிரி கெஜ்ரிவாலுக்கு தைரியமூட்டிய பிரணாப் முகர்ஜி!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் சாப்பிட பயந்த முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தைரியம் கூறியுள்ளார் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் விழா புதன்கிழமை நடந்தது. இதில் டெல்லி மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். விருதுகள் வழங்கப்பட்ட பின்பு முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்ட தேநீர் விருந்தின்போது சமோசா, சாண்ட்விச், பக்கோடா போன்றவை பரிமாறப்பட்டது.

விருந்தில் பங்கேற்ற கெஜ்ரிவால், தனது தட்டில் மிகவும் சிறிதளவே இவற்றை எடுத்துக் கொண்டார்.
அப்போது அதைக் கவனித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கெஜ்ரிவாலிடம், அருகில் பலகாரங்கள் வைக்கப்பட்டு இருந்த மேஜையை காண்பித்து, ‘‘இன்னும் கொஞ்சம் அதிகமாக எடுத்து சாப்பிடுங்கள். எந்த பாதிப்பும் வந்துவிடாது'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.












Click it and Unblock the Notifications