கர்ப்பத்தைக் கலைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பிரதியுஷா... டாக்டர்கள் தகவல்
மும்பை: சின்னத்திரை நடிகை பிரதியுஷா தற்கொலைக்கு முன்னர் கருக்கலைப்பு செய்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த பிரபல இந்தி சின்னத்திரை நடிகை பிரதியுஷா (24). இவர் நடித்த இந்தி சீரியல் ஒன்று தமிழில் மண்வாசனை என்ற பெயரில் ஒளிபரப்பாவதால், தமிழ் ரசிகர்களுக்கும் இவர் அறிமுகமானவரே.
இந்நிலையில், இம்மாதம் முதல் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் பிரதியுஷா. காதலருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

காதலரிடம் விசாரணை...
இது தொடர்பாக அவரது காதலரான தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் மீது பிரதியுஷாவின் தாயார் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

சந்தேகம்...
இதற்கிடையே பிரதியுஷாவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் தற்கொலை செய்து கொண்டபோது கர்ப்பமாக இருந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தனர். தற்போது ஆய்வுகளின் மூலம் அந்த சந்தேகம் உண்மையாகியுள்ளது.

கர்ப்பம் உறுதி...
அதாவது கர்ப்பமாக இருந்த பிரதியுஷா, தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கருக்கலைப்பு செய்திருக்க வேண்டும் என்பது அவர்களது வாதம். இது பிரதியுஷா கருப்பபையில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களை பரிசோதனை செய்ததன் மூலம் தெரிய வந்துள்ளதாக ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை...
ஆனால், எவ்வளவு நாட்கள் அவர் கர்ப்பமாக இருந்தார் என்றும், ஏன் கருக்கலைப்பு செய்தார் என்பது குறித்தும் காரணம் தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வழக்கில் திருப்பம்...
பிரதியுஷா கர்ப்பமாக இருந்ததும், பின்னர் அதனை அவர் கருக்கலைப்பு செய்து கொண்டதும் உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications