வரதட்சணை கேட்டு 8 மாத கர்ப்பிணி எரித்துக் கொலை: கணவர், மாமனார், மாமியாருக்கு வலை
காக்கிநாடா: ஆந்திராவில் வரதட்சணை கேட்டு 8 மாத கர்ப்பிணி பெண் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகரான காக்கிநாடாவைச் சேர்ந்தவர் புஷ்பா(20). அவருக்கும் சாமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த புஷ்பா நேற்று இரவு அவரது கணவர் வீட்டில் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து புஷ்பாவின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
எங்கள் மகளை அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கடந்த சில மாதங்களாக நச்சரித்து வந்தனர். இந்நிலையில் அவரை எரித்துக் கொன்றுவிட்டனர் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் புஷ்பாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications