தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேர் கருணை மனுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி!
டெல்லி: பல்வேறு வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகில் உள்ள நிதாரி கிராமத்தைச் சேர்ந்த சுரீந்தர் கோலி, ஏராளமான சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ரேணுகாபாய், சீமா இருவரும் ஏராளமான குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனைப் பெற்றுள்ளனர். அது போல மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜேந்திர பிரசுலாதராவ், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகதீஸ், அஸ்ஸாமை சேர்ந்த ஹோலிராம் ஆகியோர் கொலை, பலாத்கார வழக்குகளில் சிக்கி தூக்கு தண்டனை பெற்றனர்.
இவர்கள் 6 பேரும் தங்கள் தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கருணை மனு கொடுத்திருந்தனர். அந்த மனுக்கள் மீது கருத்து தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஜனாதிபதி கருத்து கேட்டு இருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அந்த 6 மனுக்களையும் ஆய்வு செய்தார். அந்த 6 பேரின் மனுக்களை நிராகரிக்கும்படி நேற்று அவர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தார்.
உள்துறைஅமைச்சகத்தின் அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 6 குற்றவாளிகளின் கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications