பாய்லின் புயல் எச்சரிக்கை: மெழுகுவர்த்தி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு
ஹைதராபாத்: பாய்லின் புயல் எச்சரிக்கையால் ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மெழுகுவர்த்தி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
புயல் காரணமாக முன்பாகவே இரு மாநிலங்களிலும் கனமழை கொட்டியது. புயலின் தாக்கத்தால் அடுத்த சில தினங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பர்க்கப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதி மக்கள் நேற்றும், இன்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரே நாளில்....
ஒடிசாவின் 7 மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகள் விற்பனை நேற்று ஒரே நாளில் நடந்துள்ளது.

அதிக விலை....
தக்காளி, உருளைக்கிழங்கு இரண்டும் காய்கறி கடைகளுக்கு வந்ததும் விற்று தீர்ந்தனவாம். காய்கறிகள் தேவை அதிகரித்ததால் கடைக்காரர்கள் காய்கறி விலைகளை 2 மடங்கு உயர்த்தி விற்பனை செய்துள்ளனர்.

மெழுகுவர்த்தியின் தேவை....
அதேபோல், மின்சாரம் மீண்டும் வர ஓரிரு நாட்களாகும் என்று கருதும் மக்கள், மெழுகுவர்த்திகளையும் வாங்கிச் செல்கின்றனராம். இதனால், மெழுகுவர்த்திகளின் விலையும் நேற்று ஒரே நாளில் பல மடங்கு அதிகமாக எகிறியுள்ளது.

மருந்துப் பொருட்கள்....
அந்த வகையில், முன்னெச்சரிக்கையாக சிலர் மருந்துப் பொருட்களும் வாங்கியதால், அதுவும் அதிக அளவில் விற்பனையானதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications