எதிர்ப்பை மீறி கோவைக்கு புறப்பட்டார் மோடி!
ஈஷா யோக மையத்தில் ஆதி யோகி சிவன் சிலையைக் திறக்க கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் பிரதமர் மோடி லக்னோவில் இருந்து கோவைக்குப் புறப்பட்டார்.
லக்னோ : ஈஷா யோக மையத்தில் ஆதி யோகி சிவன் சிலையை திறக்க கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் பிரதமர் மோடி லக்னோவில் இருந்து கோவைக்கு புறப்பட்டார்.
கோவையில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 112 அடி உயர "ஆதியோகி' சிலை திறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.

இதையொட்டி கடந்த பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், விழா நடைபெறும் இடத்தில் அண்மையில் ஆய்வு செய்தனர். மேலும் பிரதமர் வருகையையொட்டி கோவை முழுவதும் பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடி வருகைக்கு கடும் எதிர்ப்பும் உள்ளது.
எதிர்ப்பை மீறி கோவைக்கு புறப்பட்டார் மோடி! https://t.co/k4n1ztauId #Modi #isha pic.twitter.com/tjn3vCX1WL
— Oneindia Tamil (@thatsTamil) February 24, 2017
இந்த நிலையில் பிரதமர் மோடி உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 2.35 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். மாலை 5.20 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார் மோடி. பின்னர் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புகிறார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications