சசிகலாவுக்கு சகல உதவிகளும் செய்த பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் அனிதா.. டிரான்ஸ்பர்!!
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையின் கண்காணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட அனிதா வேறு ஒரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் சசிகலாவுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சிறை துணை டிஐஜியாக இருந்த ரூபா ஆய்வில் கண்டதை புகாராக அளித்தார்.

அவர் சிறை துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் மீதும் சசிகலாவிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து சிறை முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விசாரணையில் யாருடைய சம்பந்தப்பட்டவர்களின் குறுக்கீடு இருக்க கூடாது என்பதற்காக சிறை துறை டிஐஜியாக இருந்த ரூபாவை போக்குவரத்து துறைக்கு இடமாற்றியும், டிஜிபி சத்தியநாராயண ராவை காத்திருப்போர் பட்டியலிலும் வைத்தனர்.
மேலும் சிறையில் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ண குமாரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு அனிதா நியமிக்கப்பட்டார். அவர் சசிகலாவுக்கு ஆதரவானவர் என்ற தகவல்கள் வெளியாகின. அனிதாவின் நியமனத்துக்கு கைதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் வெளியான வீடியோ காட்சியில் சசிகலாவும் , இளவரசியும் ஷாப்பிங் சென்றுவிட்டு வருவது போன்றும் அவர்களுக்கு துணையாக சிறை கண்காணிப்பாளர் அனிதா வருவது போன்ரும் காட்சிகள் இருந்தன.
இதைத் தொடர்ந்து சிறை துறை கண்காணிப்பாளராக இருந்த அனிதா அங்கிருந்து தார்வாட் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரமேஷ் என்பவரை பரப்பன அக்ரஹார சிறையின் கண்காணிப்பாளராக நியமித்துள்ளனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications