மோடியுடன் மேடை ஏற மாட்டேன்: மகாராஷ்டிர முதல்வர் சவானும் அறிவிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் ஏறப் போவதில்லை என்று அம்மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரதமர் மோடியுடன் மேடை ஏறினார் பிரித்விராஜ் சவான். ஆனால் முதல்வர் சவானுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் கோஷம் போட்டதால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதேபோல் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலை திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதில் காங்கிரசை சேர்ந்த மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவு பங்கேற்றார். ஆனால் ஹுடா பேச தொடங்கியதும் கூட்டத்தில் இருந்த பாரதிய ஜனதா தொண்டர்கள் கூச்சலிட தொடங்கினர்.

இதனால் அவர் பேச்சை பாதியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஹுடா, இனிமேல் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்றார்.
இப்படி காங்கிரசை சேர்ந்த இரண்டு மாநில முதல்வர்களுக்கும் அவமானம் ஏற்பட்டதை தொடர்ந்து இனிமேல் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சி முதல்வர்கள் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் கட்டளை பிறப்பித்தது.
இதனிடையே இன்று நாக்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தாம் பங்கேற்க போவதில்லை என மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications