For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எப்படியெல்லாம் நடக்குது பாருங்க... "கொத்தோட" போச்சே!

Google Oneindia Tamil News

மீரட்: உ.பி. மாநிலம் மீரட் நகரில் அரவாணி ஒருவரிடம் சிக்கிய இரண்டு இளைஞர்களின் அந்தரங்க உறுப்பை அந்த அரவாணி அறுத்து விட்டார். இரு இளைஞர்களும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Private Parts Of Two Youths Allegedly Chopped Off By A Eunuch

மீரட் நகரின் ஜானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சாலி என்ற இடத்தில் கோழிப்பண்ணை அருகே இந்த இரு இளைஞர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்த மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களது பெயர்கள் சபீர் (35), பிரதீப் என்று தெரிய வந்துள்ளது. சபீர், சிவல்காஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர். பிரதீப், ஜானியைச் சேர்ந்தவர்.

சபீர் போலீஸாரிடம் கூறுகையில், நீலம் என்ற அரவாணி எங்களை அழைத்தார். நாங்களம் போனோம். அங்கு எங்களுக்கு டீ கொடுத்தார். பின்னர் இருவரும் மயங்கி விட்டோம். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார்.

இருவரையும் மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்த நீலம் மேலும் சில அரவாணிகளின் துணையுடன் இரு இளைஞர்களின் மர்ம உறுப்புகளையும் அறுத்துள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த செயலில் ஈடுபட்ட அரவாணி நீலத்தை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

English summary
The private parts of two youths were today allegedly chopped off by a eunuch in the district, police said. The incident came to light this morning when villagers found two youths, in critical condition near Panchali poultry farm under Jaani police station limits, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X