சோனியாவின் சுயசரிதையை எழுதுகிறார் பிரியங்கா காந்தி
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் சுயசரிதையை அவரது மகள் பிரியங்கா காந்தி எழுதுவதாக முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் தமது சுயசரிதையில் ராஜிவ் காந்தியின் ஈழப் பிரச்சனை தொடர்பான அணுகுமுறைகள், சோனியா பிரதமர் பதவி ஏற்க ராகுல் காந்தி முட்டுக்கட்டையாக இருந்தது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்த சோனியா காந்தி, தாமும் ஒரு சுயசரிதை எழுதுவதாகவும் அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த நட்வர்சிங், சோனியா சுயசரிதை எழுதுவது மகிழ்ச்சிக்குரியது. அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் சோனியா தனது சுயசரிதையை அவரது மகள் பிரியங்காதான் எழுதுவதாக என்னிடம் கூறினார். சோனியாவே தன்னுடைய சுயசரிதையை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications