நாடாளுமன்றத்திற்கு 'டூர்' வந்த சோனியா பேரன் ரைஹான்.. சபையில் இல்லாத ராகுல் மாமா!
டெல்லி: பிரியங்கா காந்தி வாத்ராவின் மகன் ரைஹான் நாடாளுமன்றத்திற்கு தனது நண்பர்களுடன் வந்து அவை பணிகளை பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து பார்த்தார்.
காங்கிரஸின் காந்தி குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறை வாரிசு பிரியங்கா காந்தி வாத்ராவின் மகன் ரைஹைான். 13 வயதாகும் ரைஹான் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
பிரியங்கா ரேபரேலி, அமேதி தொகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது தனது மகனையும், மகளையும் அவ்வப்போது அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம்
ரைஹான் வாத்ரா தனது பள்ளி நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவரை பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படங்கள் எடுக்க முயற்சி செய்தனர்.
லோக்சபா
லோக்சபாவுக்கு வந்த ரைஹான் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் உட்கார்ந்து அவை நடவடிக்கைகளை பார்த்தார்.
பாட்டி சோனியா
லோக்சபாவுக்கு ரைஹான் வந்திருந்தபோது அவையில் அவரின் பாட்டியும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி இருந்தார். ஆனால் அவரின் மாமா ராகுல் காந்தி தான் அந்த நேரம் அவைக்கு வரவில்லை.
பிடிச்சிருக்கு
பள்ளி ப்ராஜெக்ட் விஷயமாக நாடாளுமன்றத்திற்கு வந்தீர்களா என்று ரைஹானிடம் கேட்க இல்லை என்றார். மேலும் அவை நடவடிக்கைகளை பார்வையிட்டது பிடித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் அலுவலகம்
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தையும் ரைஹான் சுற்றிப் பார்த்தார். நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்த்த பிறகு அவர் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்.