மாண்டியாவில் தொடரும் போராட்டம்- பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தம்!! # cauvery

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் போராட்டங்கள் தொடர்கின்றன. இதனால் அங்கு பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை காவிரி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான உடனேயே பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வன்முறை உச்சகட்டத்தை எட்டியது.

100-க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் பேருந்துகளும் லாரிகளும் கொத்து கொத்தாக தீ வைத்து எரிக்கப்பட்டன. பெங்களூருவில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 52 கேபிஎன் பேருந்துகள் தீக்கிரையாகின. இதேபோல் பெங்களூருவில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 35 தமிழக லாரிகளும் தீக்கிரையாகின.

Pro-Kannada activists protest in Mandya

மேலும் போலீசார் வாகனத்துக்கும் வன்முறை கும்பல் தீ வைக்க முயற்சித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதையடுத்து பெங்களூரு, மைசூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ஆனால் மாண்டியாவில் இன்றும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாண்டியாவில் பேருந்துகள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனப் போக்குவரத்தும் இயக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+