எல்லைகளில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்...கபினி, கேஆர்எஸ் அணை பகுதிகளில் தடை உத்தரவு #cauvery
பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கன்னட அமைப்பினரின் போராட்டம் தொடருவதால் எல்லைகளில் பதற்றம் நீடிக்கிறது. மேலும் காவிரி நீர் திறந்துவிடப்பட்ட கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதிகளில் போராட்டக்காரர்கள் ஒன்று கூட தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 10,000 கன அடி, கபினி அணையில் இருந்து 5000 கன அடி நீர் என மொத்தம் 15,000 கன அடி நீரை கர்நாடக அரசு நள்ளிரவு 12 மணிக்கு திறந்துவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையையும் அவர்கள் எரித்தனர். அதேபோல் காவிரியில் நீரை திறந்துவிட்ட கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மையையும் எரித்தனர்.

தமிழக வாகனங்கள் நிறுத்தம்
தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள், வாகனங்கள் எல்லையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

போக்குவரத்து முடக்கம்
அதேபோல் கர்நாடகாவிலிருந்தும் தமிழகத்துக்குள் பேருந்துகள், வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தடை உத்தரவு
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைப் பகுதிகளில் பிரம்மாண்ட பேரணிக்கு கன்னட ரக்ஷன வேதிக, ஜெய் கர்நாடகா சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இதனால் அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு
ஏற்கனவே கிருஷ்ணராஜகர் அணையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு அணை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மாண்டியாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications