மினிஸ்டரா இருந்தா என்ன.. ஐடி ப்ரூப் காட்டுங்க.. குலாம்நபியை குடைந்த தேர்தல் பணியாளர்!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் வாக்களிக்க சென்ற போது உரிய ஆவணம் இல்லை எனில் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் பணியாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
லோக்சபா தேர்தலில் 3வது கட்டமாக இன்று 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் குலாம்நபி ஆசாத்தின் ஜம்மு லோக்சபா தொகுதியும் ஒன்று.

இத்தொகுதியில் உள்ள ஜோகிகேட் பகுதி வாக்குச்சாவடிக்கு குலாம்நபி ஆசாத் வாக்களிக்கச் சென்றார். அப்போது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எதையும் அவர் எடுத்து செல்லவில்லை.
இதனால் அவரை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று தேர்தல் பணியில் இருந்த அலுவலர் மறுத்துவிட்டார். பின்னர் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபியின் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வந்து கொடுத்து ஓட்டு போட வைத்தனர்.












Click it and Unblock the Notifications