பொய்யான பாலியல் புகார் கொடுத்தால் நடவடிக்கை: டெல்லி கோர்ட் எச்சரிக்கை
டெல்லி: பொய்யான பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மீது, ஒரு பெண் பாலியல் புகார் அளித்தார். கூடுதல் செசன்ஸ் நீதிபதி வீரேந்திர பட் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் அந்த புகார் போலியானது என்று தெரிந்ததும், போலியாக பாலியல் புகார் அளித்த பெண் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு டெல்லி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில், பொய்யான பாலியல் புகார் காரணமாக குற்றச்செயல் புள்ளி விவரங்கள் அதிகமாவதாக நீதிபதி தெரிவித்தார்.
பொய் புகாருக்கு ஆளான நபர், சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைக்கும், தொல்லைக்கும் ஆளாவதாகவும் கூறிய நீதிபதி,
அந்த நபரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ள நீதிமன்றம், நிரபராதியான அந்த நபர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும், அவரது நேர்மை சந்தேகத்திற்கு ஆளாவதாக கூறினார்.
நிரபராதியாக அந்த நபரை விடுதலை செய்தாலும், பலரது சந்தேகப் பார்வையில் அவர் குற்றவாளியாகவே கருதப்படுகிறார். அந்த நபர் வாழ்நாள் முழுவதும் பாலியல் பலாத்கார குற்றவாளியாகவே கருதப்படுகிறார் என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆண்களுக்கும் கௌரவம் உண்டு என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி மேற்கு டெல்லியில் உள்ள ஜெய் விகார் பகுதியில் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்தார்.
வேலை வாங்கித்தருவதாக கூறி தன்னை வரச்சொன்ன அந்த பிசினஸ் மேன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் தனது புகாரில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இது பொய்யான புகார் என தெரியவரவே, நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. மேலும், புகார் கொடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தனது கடமையை செய்ய தவறியதாக நீதிமன்றம் கருதப்படும் எனவும் கூறியுள்ளது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications