புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை.. பஞ்சாப் அரசு அதிரடி
புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சண்டிகர்: புனித நூல்களை அவமதிப்பு செய்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்து மதத்துக்கு பகவத்கீதையும் இஸ்லாம் மதத்துக்கு குரானும், கிறிஸ்தவ மதத்துக்கு பைபிலும் புனித நூலாக இருக்கிறது. இந்த புனித நூல்கள் அந்தந்த மதத்தினரால் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகிறது.

சிலர் மாற்று மத புனித நூல்களை அவமதிப்பு செய்வதால், தேவையில்லாத சர்ச்சைகளும் மோதல்களும் நடைபெறுகின்றன.
இப்படியான மோதல்களைத் தடுக்கும் வகையில், புனித நூல்களை அவமதிப்பு செய்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.
இது குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகையில், புனித நூல்களை அவமதிப்பு செய்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications