பஞ்சாபில் கெளரவக் கொலை... கத்தியால் குத்தி தலித் ஜோடி கொடூரக் கொலை
ஹோஷியார்பூர், பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக திருமணமான தலித் ஜோடியை கிராமத்துக் கும்பல் சரமாரியாகத் தாக்கி கொன்றுள்ளது.
இந்தத் தம்பதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் கூட போலீஸார் பாதுகாப்பு அளிக்கத் தவறியதால் இந்தக் கொடுமை நடந்தேறியுள்ளது.
அந்தப் பெண்ணின் உறவினர்கள்தான் இந்தக் கொடூரத்தை நடத்தயுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த இளைஞரின் பெயர் சந்தீப். வயது 24. அவரது மனைவியின் பெயர் குஷ்பு, 22 வயது. இவர்களை முகமூ்டி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் கல்லால் அடித்தும், கத்தியால் கடுமையாக குத்தியும் கொன்றுள்ளனர். சந்தீப்பின் வீட்டில் வைத்து இந்தக் கொடூரம் நடந்தது. ஹோஷியார்பூர் மாவட்டம் முகவோல் கிராமத்தில் சந்தீப்பின் வீடு உள்ளது.
முதலில் குஷ்புவை அந்தக் கும்பல் குறி வைத்துத் தாக்கியது. பின்னர் சந்தீப்பைக் கொன்றனர். சந்தீப் சம்பவ இடத்திலேயே பலியானார். குஷ்புவை மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் அவர் காயம் காரணமாக உயிரிழந்தார்.
சந்தீப்பைக் காக்க முயன்ற அவரது தந்தை பிரகாஷையும் அக்கும்பல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அவரை ஹோஷியார்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். குஷ்புவும், சந்தீப்பும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை. இதையடுத்து சந்தீப்பும், குஷ்புவும் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்தத் தம்பதிக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பஞ்சாப் போலீஸுக்கு உத்தரவிட்டது.
ஆனால் அவர்களுக்கு ஹோஷியார்பூர் மாவட்ட போலீஸ் உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை. உயிர் பயத்திற்கு மத்தியில்தான் தங்களது கிராமத்திற்கு இத்தம்பதி வந்து வாழ்க்கையைத் தொடங்கியது. போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வாழ்ந்து வந்த அவர்களை பெண் வீட்டார் தற்போது சமாதியாக்கி விட்டனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications