செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு வரி - பஞ்சாப் அரசு அதிரடி

செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுக்கு 250 ரூபாய் வரி விதித்தது பஞ்சாப் அரசு

Subscribe to Oneindia Tamil

லூதியானா : செல்லப்பிராணிகள், வீட்டு விலங்கு வைத்திருப்பவர்களுக்கு வரி விதித்து புதிய சட்டத்தை அறிவித்து இருக்கிறது பஞ்சாப் அரசு.

வீட்டில் வைத்திருக்கும் செல்லப்பிராணிகளுக்கும், வீட்டு விலங்குகளுக்கும் வரி விதித்து புதிய சட்டத்தை அமல்படுத்தியது பஞ்சாப் மாநில அரசின் உள்துறை அமைச்சகம். அதன்படி செல்லப்பிராணிகளாக ஆடு, நாய், பூனை ஆகியவற்றிற்கு ஆண்டுக்கு 250 ரூபாய் வரி செலுத்த வேண்டும்.

Punjab state government levied new tax for Pet animals and domestic animals

வீட்டு விலங்குகளான மாடு, குதிரை போன்றவற்றிற்கு ஆண்டுக்கு 500 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தனியாக ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனி அடையாள எண்ணும், முத்திரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில விவசாயிகள், 'இது மாநிலத்தின் பால் வளத்தை குறைக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை. இதனால் விவசாயிகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே நலிந்து வரும் விவசாயிகள் இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள்' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+