சிபிஐ வைக்கிறீங்களா, வைங்க.. நான் ரெடி.. "தில்"லாகப் பேசும் ராதே மா...!
மும்பை: சிபிஐ விசாரணைக்கும் கூட நான் தயாராக இருக்கிறேன். நான் ஒரு தாய்.. என்னைத் தேடி வரும் பக்தர்கள் எனது பிள்ளைகள் போல. அவர்களிடம் நான் நடந்து கொள்வது, தாய்க்கும், பிள்ளைக்கும் இடையிலான உறவு போலத்தான். நான் சுத்தமானவள். என் மீது எந்தத் தவறும் இல்லை. என் மீது சிபிஐ விசாரணை வைத்தாலும் கூட நான் சந்திக்கத் தயார் என்று சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா கூறியுள்ளார்.
கடந்த வாரம் ராதே மா மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வரதட்சணை கொடுமைப் புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு ராதே மா மீது ஏகப்பட்ட .சரச்சைகள் வெடித்துள்ளன. அவர் ஆபாசமாக டான்ஸ் ஆடுகிறார், கவர்ச்சி உடை அணிகிறார். பக்தர்கள் இவரைத் தூக்குகிறார்கள், கட்டிப்பிடிக்கிறார்கள், முத்தமிடுகிறார்கள். இவரது கவர்ச்சிகரமான படங்களும் கூட வெளியாகிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் தான் மீதான வழக்கை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ராதே மா. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
நான் சுத்தமானவள்
நான் சுத்தமானவள். தூய்மையானவள். அப்பழுக்கற்றவள். நான் ஒரு அப்பாவி. மீடியாவையும், போலீஸையும் நான் மதிக்கிறேன்.
பாசம் மட்டுமே.. ஆபாசம் இல்லாதவள்
நான் எனது பக்தர்களிடம் பாசம் வைத்துள்ளேன். ஆபாசம் இல்லாதவள் நான். எந்த ஆபாசத்தையும் நான் செய்ததில்லை.
தாய் மாதிரி
நான் ஒரு தாய். எனது பக்தர்கள் எனது பிள்ளைகள். அவர்களிடம் நான் தாய் போலத்தான் பழகுகிறேன். அவர்களும் எனது பிள்ளைகள் போலத்தான் பழகுகிறார்கள்.
மகன் முத்தம் கொடுத்தால் தப்பா
ஒரு தாய்க்கு மகன் முத்தம் கொடுத்தால் தவறாகுமா. அதுபோலத்தான் எனது பிள்ளைகளான பக்தர்களும் கட்டிப்பிடிக்கிறார்கள், முத்தமிடுகிறார்கள். இதைப் போய் ஏன் தவறாகப் பார்க்கிறார்கள்.
சிபிஐ விசாரணைக்கும் ரெடி
என் மீது சிபிஐ விசாரணை வைத்தாலும் நான் அதைச் சந்திக்கத் தயார். எந்தவிதமான விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் ராதே மா.