நேபாள பூகம்பத்தில் சிக்கியவர்களை மீட்ட விமானப்படை விமானிகள் 2 பேருக்கு வாயு சேனா பதக்கம்
பெங்களூர்: 67வது குடியரசு தினமான இன்று விமானப்படை ஹெலிகாப்டர் விமானிகள் இருவருக்கு வாயு சேனா பத்தகம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை வீரர்கள் விங் கமாண்டர் நிர்மல் குமார் பக்ஷி மற்றும் விங் கமாண்டர் ராஜீவ் தோபல். இருவரும் எம்.ஐ.-17 வி5 ஹெலிகாப்டர் விமானிகள் ஆவர். நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோது மீட்பு பணியில் துணிச்சலுடன் ஈடுபட்ட அவர்கள் இருவருக்கும் இன்று வாயு சேனா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
நேபாளத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 12ம் தேதி இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டபோது அந்நாட்டு அதிகாரிகள் விங் கமாண்டர் பக்ஷியின் உதவியை நாடினர். உடனே ஹெலிகாப்டருடன் பக்ஷி சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டார்.
மோசமான வானிலையிலும் பக்ஷி சிறப்பாக ஹெலிகாப்டரை இயக்கினார். குறைந்த நேரத்தில் பல்வேறு இடங்களில் இருந்து படுகாயம் அடைந்த 4 குழந்தைகள் உள்பட 9 பேரை பக்ஷி மீட்டார். அவர் நேபாளத்தில் 55 மணிநேரம் ஹெலிகாப்டரை இயக்கி மீட்பு பணியில் ஈடுபட்டார்.
விங் கமாண்டர் ராஜீவ் நேபாளத்தில் நடந்த ஆபரேஷன் மைத்ரியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மோசமான வானிலையிலும் அவர் காத்மாண்டு கிளம்பிச் சென்றார். லுக்லாவில் சிக்கித் தவித்த இந்தியாவைச் சேர்ந்த 95 மலையேறும் வீரர்களை அவர் மீட்டார். லாங்தாங் கிராமத்தில் இருந்த ஸ்பெயினைச் சேர்ந்த மீட்பு குழுவை மீட்க ராஜீவ் சென்றார்.
அங்கு சென்ற பிறகு தான் அவர்கள் ஏற்கனவே அங்கிருந்து கிளம்பிவிட்டது தெரியவந்தது. மேலும் அப்போது அங்கு பனிப்புயல் வீசிக் கொண்டிருந்தது. பனிப்புயலிலும் அவர் ஹெலிகாப்டரை இயக்கி ஸ்பெயின் குழுவை கண்டுபிடித்து மீட்டார் என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications