தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை விரைவில் அறிவிக்கிறார் ராகுல் !
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பதை வரும் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் கட்சி மேலிட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

இதையடுத்து யாரை தமிழக தலைவராக அறிவிப்பது என்பதில் காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் உள்ளது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று உயிர்ப்போடு வைத்திருக்கும் தலைவரை கட்சி மேலிடம் தேடி வருகிறது.
தலைவர் பதவி போட்டியில், தமிழ் மாநில காங்கிரசில் இணைந்து சமீபத்தில் மீண்டும் காங்கிரசுக்கு வந்த, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், எச்.வசந்தகுமார், மாணிக்தாகூர், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.
இதில், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சோனியாவுக்கு நெருக்கமான சிலர் தகவல் தந்துள்ளனர்.
இவற்றில், கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாவும், புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே காராத்தே தியாகராஜன் நேற்று ராகுல் காந்தியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications