முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாளின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு: ராகுல் காந்தி
பெங்களூர்: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பொன்னம்மாளின் மறைவுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
நிலக்கோட்டை முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பொன்னம்மாளின் மறைவுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவரும், பொன்னம்மாளின் பேத்தியுமான ஜான்சி ராணிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் தனது இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
உங்களது பாட்டி ஏ.எஸ். பொன்னம்மாள் மரணம் அடைந்ததை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அதற்காக எனது ஆழ்ந்த இரங்கலையும், மன வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவின் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒரு மூத்த தலைவரை இழந்துவிட்டது. அவர் கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் நீண்ட நாட்களாக சிறப்புடன் பணியாற்றினார். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும், பெண்கள் உரிமைகளுக்கும் இடைவிடாது சேவை புரிந்தார்.
அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பேரிழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும், உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்காகவும் இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications