ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமே மகாத்மா காந்தியை படுகொலை செய்தது: குஜராத்தில் ராகுல் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Rahul Gandhi
பர்தோலி: ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியின் படுகொலைக்கு காரணமாக இருந்தது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் பிரச்சார கூட்டத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் பர்தோலியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரலாறு தெரியாமல் குஜராத்தில் ஆட்சி நடத்துகிறார். அவர் வரலாற்றை சரியாக படிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் நரேந்திர மோடி. ஆனால் அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நச்சுத்தன்மை கொண்டது எனக் கூறியவர் சர்தார் வல்லபாய் படேல்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சித்தாந்தம்தான் மகாத்மா காந்தி கொலைக்கு காரணம். காந்தி மறைவுக்கு பின்னர் ஆர்.எஸ். எஸ்., இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று பட்டேல் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட பட்டேலுக்கு சிலை அமைக்கிறார் நரேந்திர மோடி.

குஜராத்தில் சிறைக்கு சென்றவர்களே அமைச்சர்களாக உள்ளனர். இந்த மாநிலத்தில் 13,000 அரசு பள்ளிகளும், 55, 000 சிறு தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன.

குஜராத்தில் 6000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தகவல் ஆணையர்கள் உள்ளனர். ஆனால் குஜராத்தில் ஒருவர் தான் இருக்கிறார்.

குஜராத்தில் 9 ஆண்டுகளாக லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. குஜராத் அரசு பணக்காரர்களால் நடத்தப்படுகிறது. குஜராத்தில் ஏழைகளின் ஆட்சி வர வேண்டும் என்றே விரும்புகிறேன்;

ஒரு தனிப்பட்ட மனிதரால் அல்ல.. டீ விற்பவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும் ஆனால் நாட்டை ஏமாற்றுபவர்களை எப்படி மதிக்க முடியும்?

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+