ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது ஏழை, எளிய மக்கள் மீதான தாக்குதல்: ராகுல்காந்தி
அல்மோரா: அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை அல்ல. இது ஏழை, எளிய மக்கள் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ரூபாய் நோட்டுக்கள் ரத்து நடவடிக்கையானது கருப்புப் பணம் அல்லது ஊழலுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது பொருளாதார கொள்ளை. நமது நாட்டில் உள்ள 99 சதவீத மக்களை கஷ்டத்தில் தள்ளிய பிரதமர், அனைத்து கருப்புப் பணத்தையும் வைத்துள்ள ஒரு சதவீத பணக்கார்களை குறிவைக்கவில்லை.

நாட்டில் கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது, கருப்புப் பணத்துக்கோ, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. இது பொருளாதாரத் திருட்டு நடவடிக்கை. நாட்டின் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் மீதான தாக்குதல். இவ்வாறு அவர் பேசினார்.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications