ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது ஏழை, எளிய மக்கள் மீதான தாக்குதல்: ராகுல்காந்தி

Subscribe to Oneindia Tamil

அல்மோரா: அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை அல்ல. இது ஏழை, எளிய மக்கள் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ரூபாய் நோட்டுக்கள் ரத்து நடவடிக்கையானது கருப்புப் பணம் அல்லது ஊழலுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது பொருளாதார கொள்ளை. நமது நாட்டில் உள்ள 99 சதவீத மக்களை கஷ்டத்தில் தள்ளிய பிரதமர், அனைத்து கருப்புப் பணத்தையும் வைத்துள்ள ஒரு சதவீத பணக்கார்களை குறிவைக்கவில்லை.

Rahul Gandhi addresses a rally in Uttarakhand on Friday.

நாட்டில் கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது, கருப்புப் பணத்துக்கோ, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. இது பொருளாதாரத் திருட்டு நடவடிக்கை. நாட்டின் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் மீதான தாக்குதல். இவ்வாறு அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+