பண ஒழிப்பு விவகாரத்துக்கு தேர்தலில் பாஜகவை மக்கள் பழிவாங்குவர்!- ராகுல், அகிலேஷ்
லக்னோ: ரூ 1000, 500 நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை எடுத்ததற்காக உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவை மக்கள் பழிவாங்குவர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் கூறினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

அகிலேஷ் யாதவுடன் நான் கூட்டணி வைத்தபிறகு, பிரதமரின் மனநிலை மாறிவிட்டது. அவரது முகத்தில் இருந்த புன்னகை தற்போது ஆவியாகி மறைந்துவிட்டது.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸும், சமாஜவாதியும் சேர்ந்து ஆட்சியமைக்கும். பீகார் தேர்தலுக்குப் பிறகு, அந்த மாநிலம் குறித்து மோடி ஒருமுறை கூடப் பேசவில்லை. அதேபோல்தான், உத்தரப் பிரதேசம் குறித்தும் 2019-ஆம் ஆண்டு வரையிலும் அவர் பேசமாட்டார். உத்தரப் பிரதேசத்தை மறந்துவிடுவார்.
நல்ல காலம் குறித்த படத்தை காண்பித்த அவர், தற்போது ஷோலே ஹிந்திப் படத்தின் கப்பர் சிங் கதாபாத்திரம் போல நடிக்கிறார்.
ஊழலுக்கு எதிராக தாம் போராட விரும்புவதாக தெரிவிக்கிறார். மக்களின் கைகளில் இருந்த பணத்தை வெறும் தாளாக அவர் மாற்றிவிட்டார். இதற்கு மக்கள் தற்போது பழிவாங்கப் போகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் 30 நாள் யாத்திரை முடிந்து பிரதமரை நான் சந்தித்துப் பேசினேன். அப்போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மௌனமாக இருந்து விட்டார்.
ஆனால், தற்போது தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும் என்று தெரிவிக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றால்தான் இதைச் செய்ய வேண்டுமா... மோடி அவர்களே, நீங்கள் நாட்டின் பிரதமர். அமைச்சரவையைக் கூட்டி உடனே விவசாயிகள் கடன்களை ரத்து செய்யுங்கள்," என்றார்.
அகிலேஷ் யாதவ்
தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், "உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை எடுத்ததன் மூலம், பாமர மக்களை ஏடிஎம் மையங்களின் முன்பு வரிசையில் பாஜக நிற்க வைத்துவிட்டது. எனவே, தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின் 3-ஆவது, 4-ஆவது கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், மக்களின் மனநிலையை அக்கட்சி தெரிந்து கொள்ளும். அப்போது பாஜக தலைவர்களின் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டியிருக்கும்.
உத்தரப் பிரதேச மக்கள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தலில் வாக்களிக்கக் கூடாது. அக்கட்சி மீது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், இதற்கு முன்பு தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் அக்கட்சி சேர்ந்து கொண்டது.
புந்தேல்கண்ட் பகுதியில் வறட்சி நிலவியபோது மத்திய அரசு, இப்பகுதிக்கு வெற்று ரயிலையே அனுப்பியது. தண்ணீர் அளிக்கவில்லை. அப்போது மாநில அரசுதான் மக்களுக்கு உதவியாக வந்தது," என்றார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications