'ஒன் ரேங் ஒன் பென்ஷன்' திட்டத்தில் ராகுல் நாடகமாடுகிறார்: முக்தார் அப்பாஸ் நக்வி தாக்கு
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் குறித்து பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்த ராகுல்காந்தி முயன்றுள்ளார் என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
டெல்லி: ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை வைத்து ராகுல் காந்தி அரசியல் நாடகமாடுவதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த ராணுவ வீரரின் சடலத்தை பார்க்கச் சென்ற காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திரை சந்தித்ததன் மூலம் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் குறித்து பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்த ராகுல்காந்தி முயன்றுள்ளார்.
இதெல்லாம் பகுதி நேர அரசியல்வாதிகள் போடும் முழுநேர அரசியல் நாடகம். இந்த அரசியல் நாடகம் நிறுத்தப்பட வேண்டும். முதலில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர் சிமி பயங்கரவாதிகள் குறித்த கேள்வி உருவாக்கப்பட்டது. இப்போது ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் குறித்து குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
40 ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர்கள் இந்த திட்டம் குறித்து இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் தான் இந்த காலதாமதத்துக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதால் அதை தவிர்க்க இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். இவ்வாறு நக்வி கூறினார்.












Click it and Unblock the Notifications