பரமபதம் ஆடிய ராகுல்காந்தி
Subscribe to Oneindia Tamil
லக்னொ: அமேதியில் ராகுல்காந்தியும், மெயின்புரி தொகுதியில் முலாயம்சிங் யாதவும் ஆரம்பம் முதலே முன்னிலையிலிருந்தனர். ஆனால் பரமபதம்போல ராகுல்காந்தி திடீரென பின்னுக்கும் பிறகு முன்னுக்குமாக வந்து வந்து சென்றார். ஒருவழியாக இறுதியில் வெற்றி பெற்றார்.

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த நிலையில், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியும், உ.பி மாநிலத்தின் மெயின்புரி தொகுதியில் முலாயம்சிங் யாதவும் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர்.
காலை 11 மணிக்குள் இத்தொகுதிகளில் டிரெண்ட் சரியாக வெளியானது. ஆனால் பிறகு அவ்வப்போது இரு தலைவர்களும் பின்னுக்கு செல்வதும் முன்னால் வருவதுமாக இருந்தனர்.












Click it and Unblock the Notifications