மோடியின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது லோக்சபா தேர்தல் முடிவுகள்: காஷ்மீரில் ராகுல் காந்தி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். பரப்புரையின்போது பேசிய அவர், கடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் மோடியின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறியுள்ளார்.
பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட் பகுதியில், காங்கிரஸ்-தேசிய மாநட்டு கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசியதாவது, "மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுள்ளன. அரசின் மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளன. நரேந்திர மோடியை நாங்கள் உளவியல் ரீதியாக அசைத்துவிடோம். அவர் நம்பிக்கை இழந்துவிட்டார் என்பது அவரது முகத்திலேயே வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் முன்பு இருந்தது போல் இல்லை.

எதிர்க்கட்சிகளின் பணிகளை நாங்கள் மிகச்சரியாக செய்து வருகிறோம். மத்திய அரசு மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவரம்போதெல்லாம் நாங்கள் அதற்கு எதிராக நிற்கின்றோம். இதனால் அந்த சட்டத்தை அவர்களால் அமல்படுத்த முடியாமல் போகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இரண்டுமே சாதி, மதத்தின் பெயரால் வெறுப்பை பரப்பி அதன் மூலம் வன்முறையை தூண்டி வருகின்றன. வெறுப்பின் சந்தைகளில் அன்பின் கடைகளை காங்கிரஸ் திறந்து வைத்திருக்கிறது.
இந்தியாவில் ஒரு யூனியன் பிரதேசம் மாநிலமாக மாற்றப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதை பார்த்திருக்கிறீர்களா? அது ஜம்மு காஷ்மீரில் நடந்திருக்கிறது. இந்த மாநில மக்களின் உரிமை முழுமையாக பறிக்கப்பட்டிருக்கிறது. எனவேதை அது திரும்ப வழங்கப்பட வேண்டும். இதுவே எங்களின் முதன்மையான கோரிக்கையாகும்.
தேர்தலுக்குப் பிறகு அவர்கள் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கத் தவறினால், உங்கள் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதை உறுதிசெய்ய நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்போம்" என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் கடந்த 18ம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்தும், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக ஆகியவை தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications