அசாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 - தேர்தல் அறிக்கை.. தமிழ்நாட்டை காப்பியடித்த காங்கிரஸ்!
கவுகாத்தி: அசாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆட்சியில் இருந்து வரும் பாஜக, ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஆர்வமாக உள்ளது. இந்த நிலையில் அசாமில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தமிழகத்தில் திமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறியது. இதைப்போல் குடும்ப தலைவிகளை குறி வைத்துள்ள காங்கிரசும், அசாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்படும், அரசு துறைகளில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்., ஒரு குடும்பத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தினசரி சம்பளம் ரூ.365 ஆக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications