இன்னமும் 'அரசியலுக்கு' திரும்பாத ராகுல் காந்தி- லீவு நீட்டிப்பு!!
டெல்லி: நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது லீவை மேலும் நீட்டித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார், எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகாததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி விரும்பியதாகவும், அதற்கு சோனியா தடை விதித்ததாலேயே அவர் கோபித்துக் கொண்டதாகவும் தகவல் பரவியது.

மேலும் காங்கிரஸ் கட்சியினரே, ராகுல் காந்தி பற்றிய பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியதால் சர்ச்சை தீவிரமானது.
புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்காக, சில ஆழ்மனப்பயிற்சிகளை கற்றுக்கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளார் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனாலும் ராகுல் காந்தியிடம் இருந்தும் எந்தவித பதிலும் வரவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் டெல்லி திரும்பியது குறித்து எந்தவித தகவலும் இல்லை.
இதனிடையே ராகுல் காந்தி, தனது லீவை நீட்டித்து உள்ளதாகவும், இந்த வார இறுதியில் அவர் டெல்லி திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.












Click it and Unblock the Notifications