ராகுலின் லீவு முடிகிறது... 19ம் தேதி ரிட்டர்ன்... விவசாயிகள் பேரணியில் பங்கேற்கிறார்!
டெல்லி: அரசியலில் இருந்து விடுமுறை எடுத்துச் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள விவசாயிகள் பேரணியில் பங்கேற்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அரசியல் பணிகளில் இருந்து விடுமுறை எடுத்து ஓய்வு எடுக்கப் புறப்பட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. ஆனால், அவரின் இருப்பிடம் குறித்த விபரங்களை வெளியிட காங்கிரஸ் மறுத்து விட்டது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

ஆனபோதும், ராகுல் எங்கே இருக்கிறார், எப்போது அரசியலுக்கு திரும்புவார் என்பது குறித்து தொடர்ந்து காங்கிரஸ் மௌனம் சாதித்து வந்தது. இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் உட்பட விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 19ம் தேதி டெல்லியில் பேரணி மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்பேரணியில் ராகுல் பங்கேற்பார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவரது விடுமுறை முடிவுக்கு வருகிறது.
இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பேசினார். அப்போது அவர், ‘19ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுவார்' என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications