For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த புறப்பட்டார் ராகுல் - சித்தராமையா, குலாம் நபி ஆசாத்தும் வருகை

By Mathi
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மேகலாயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிய போது, திடீரென்று மயங்கி விழுந்து ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார் கலாம் அவர்கள்.

Rahul in Madurai

இந்நிலையில் அவரது சொந்த ஊரான தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் இன்று நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து தனிஹெலிகாப்டர் மூலமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மண்டபம் பகுதிக்கு புறப்பட்டுள்ளார்.

அவருடன் கூடவே மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரும் ராமேஸ்வரம் விரைந்துள்ளனர்.

English summary
Congress vice president rahul gandhi getting into helicopter for pay his last tribute for Abdul kalam in Rameswaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X