ஷீனா போரா வழக்கு... முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் பீட்டர் முகர்ஜியின் மகன்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜி. சி.பி.ஐ.-யிடம் கொடுத்துள்ளார்
மும்பையை சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இதற்கு உடந்தையாக இருந்த அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ஷாம் ராய் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 19-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் திடீர் திருப்பமாக பீட்டர் முகர்ஜியையும் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, பீட்டர் முகர்ஜியின் மகனும், ஷீனா போராவின் காதலனுமான ராகுலிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சி.பி.ஐ.யை சேர்ந்த சில உயர் அதிகாரிகள் ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ராகுல் முகர்ஜி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மும்பையில் 3 படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி வீட்டை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் நான் உனது தங்கை இல்லை மகள் என்று வெளியில் சொல்லிவிடுவேன் என்று இந்திராணியை ஷீனா போரா மிரட்டியதற்கான ஆதாரங்களை ராகுல் சி.பி.ஐ. யிடம் கொடுத்துள்ளதாகவும், இவை இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக இருக்கும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications