நன்றிடா சாமி.. இந்த ஆட்சி இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு.. ராகுல் டிவிட்!
நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் விவசாயிகளுக்கு வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் விவசாயிகளுக்கு வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நன்றி பாஜக ஆட்சி நிறைவடைய இன்னும் ஓராண்டுதான் உள்ளது என்றும் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் - ஏமாற்றம்
இந்த பட்ஜெட்டில் வேளாண்துறைக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

நிறைவேற்றவில்லை
இந்நிலையில் பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் 4 ஆண்டுகளை கடந்தும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சியான திட்டங்கள்
4 ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இன்னும் வாக்குறுதிகள்தான் கொடுக்கப்படுவதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகள் ஆகியும் கவர்ச்சிகரமான திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்படுவதாகவும் அதற்கான நிதி ஆதராங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
|
நல்லவேளை இன்னும் ஓராண்டுதான்
4 ஆண்டுகள் கடந்தும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அதிர்ஷ்டவசமாக இன்னும் ஓராண்டுதான் ஆட்சி உள்ளது, நன்றி என்றும் ராகுல் காந்தி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications