For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஆந்திரா மாநிலத்துக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகளை தனியாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் கடந்த 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

Rahul writes to PM Modi on special status to Andhra

ஆனால் இதுவரை சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படவில்லை. இதனிடையே ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதியில் பிரதமர் மோடி நாளை மறுநாள் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ராகுல் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்; ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உறுதிகளை நிறைவேற்ற கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary
Congress vice president Rahul Gandhi has written a letter to Prime Minister Narendra Modi regarding granting of special status to Andhra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X