இந்தியாவை கொள்ளையடிக்க நீரவ் மோடிக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை இது தான்... ராகுல்காந்தி!
இந்தியாவை கொள்ளையடிக்க நீரவ் மோடிக்கு காட்டப்பட்ட வழிகள் இது தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜகவை குற்றம்சாட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி: இந்தியாவை கொள்ளையடிக்க நீரவ் மோடிக்கு காட்டப்பட்ட வழிகள் இது தான் என்று பாஜகவை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் நீரவ் மோடிக்கு பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு நாடு தப்பிக்க என்னென்ன வழிமுறைகள் என்பதை ராகுல் பட்டியலிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் தவறான தகவல்களை அளித்து வெளிநாட்டு வங்கிகளில் இருந்து தொழிலதிபர் நீரவ் மோடி ரூ.11 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததை வங்கியே அறிவித்தது. இது குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐ உதவியை வங்கி நாடியுள்ளது.

இந்நிலையில் மோசடிப் புகார் தற்போது தான் வெளியாகும் நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதியே தொழிலதிபர் நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நீரவ் மோடி நாடி தப்பியது எப்படி அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்காது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
Guide to Looting India
— Office of RG (@OfficeOfRG) February 15, 2018
by Nirav MODI
1. Hug PM Modi
2. Be seen with him in DAVOS
Use that clout to:
A. Steal 12,000Cr
B. Slip out of the country like Mallya, while the Govt looks the other way.
#From1MODI2another
நீரவ் மோடி குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நீரவ் மோடி இந்தியாவை கொள்ளையடிக்க அவருக்கு காட்டப்பட்ட வழிகள் இது தான்.
1. பிரதமர் மோடியை கட்டித் தழுவ வேண்டும்.
2. பிரதமருடன் டாவோஸ் மாநாட்டில் பங்கேற்பது.
இந்த புகழை பயன்படுத்தி:
அ. ரூ. 12,000 கோடியை திருடலாம்
ஆ. விஜய் மல்லையாவைப் போல நாட்டை விட்டு தப்பியோடலாம், ஆனால் அரசு வேறு வழியை பார்த்துக் கொண்டிருக்கும்.
என ராகுல் தெரிவித்துள்ளார். இதே போன்று 1 மோடியிடம் இருந்து இன்னொரு மோடி என்ற ஹேஷ்டேகையும் ராகுல் பயன்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications