யோகேந்திர யாதவின் நண்பர்களின் மருத்துவமனையில் ஐ.டி ரெய்டு.. ரூ.27 லட்சம் பறிமுதல்!
சுவராஜ் இந்தியா கட்சியின் நிறுவனர் யோகேந்திர யாதவின் நண்பர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை மூலம், இதுவரை ரூபாய் 27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

ஹரியானா: சுவராஜ் இந்தியா கட்சியின் நிறுவனர் யோகேந்திர யாதவின் நண்பர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை மூலம், இதுவரை ரூபாய் 27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் பாஜக ஆட்சிக்கும், முன்னாள் காங்கிரஸ் ஆட்சிக்கும் எதிராக மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருபவர் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மீ கட்சியை தொடங்கியவர்களின் ஐவரும் ஒருவர். தற்போது இவர் அந்த கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு, சுவராஜ் இந்தியா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் இவருக்கு நெருக்கமான சில இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஹரியானாவில் உள்ள ரேவாரி பகுதியின் இரண்டு தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
இந்த வரி சோதனை மூலம், இதுவரை ரூபாய் 27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு நிதி முறைகேடு மூலம் ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்போது விசாரணை நடக்கிறது.
மேலும் இவர்கள் நிலம் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளனர். அங்கு கிடைத்த ஆவணங்களின் படி, வைரம் வாங்கியதில் 29 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதில் யோகேந்திர யாதவின் உறவினருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த யோகேந்திர யாதவ் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல் என்று கூறினார். எந்த விதமான முறைகேடும் நடக்கவில்லை என்பது விசாரணையின் முடிவில் தெரியும் என்றுள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications