ரயில்வே பட்ஜெட் 2014
-பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்தார் கெளடா
-கட்டண உயர்வு இல்லை
-கான்பூர்- நாக்பூர்- மைசூர்- பெங்களூர்- சென்னை இடையே அதிவேக ரயில்
-போஸ்ட் ஆபீஸ்களில் ரயில் டிக்கெட் பதிவு செய்யலாம்
-இனி எரிபொருள் விலை உயர்வைப் பொறுத்து ரயில் கட்டணமும் உயர்த்தப்படும்
-புதிய ரயில்கள் 5 'ஜன் சாதரன்' (common man) ரயில்கள்
-5 ப்ரீமியம், 6 ஏசி எக்ஸ்பிரஸ் ரயில்கள்
-11 ரயில்களின் தூரம் நீட்டிப்பு
-9 பாதைகளில் புதிய அதிவேக ரயில்கள்
-ரயில்வே வருமானத்தைப் பெருக்க கட்டணத்தை மட்டும் உயர்த்தினால் போதாது
-தனியாருடன் இணைந்து பார்சல் வேன்கள் வாங்கி இயக்க ரயில் திட்டம்
-தனியாருடன் இணைந்து புதிய சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்
-தமிழகத்துக்கு மொத்தமே 4 ரயில்கள்தான் கிடைத்துள்ளது
-சென்னை- சாலிமர்; மதுரை- ஜெய்ப்பூர் இடையே பிரீமியம் ரயில்கள் இயக்கப்படும்
- 18 புதிய ரயில் பாதைகள் அமைக்க சர்வே
-3, 4வது ரயில் பாதைகள், மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக்க 10 சர்வேக்கள்
-சென்னை- விசாகப்பட்டினம் இடையே வாராந்திர புதிய ரயில் இயக்கப்படும்
-தமிழகம் உட்பட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எம்.பி.க்கள் அமளி
-எம்.பி.க்களின் கடும் அமளிகளுக்கு இடையே சதானந்தா கவுடா தொடர்ந்து பட்ஜெட் தாக்கல்
-ரயில் நிலைய ஓய்வு அறைகளையும் ஆன்லைனில் முன் பதிவு செய்ய வசதி
-27 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்