தனியார் மூலம் ரயில் டிக்கெட் விற்க திட்டம்: யூனியன்கள் கொந்தளிப்பு
டெல்லி: ரயில் டிக்கெட் விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ரயில்வே பட்ஜெட் அறிவிப்பின் படி, உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு பணிகளை தனியார் மயமாக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, 50 பெரிய ரயில் நிலையங்களில் துப்புரவு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
இதே போல் டிராக்மென், ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளில் கேட்கீப்பர்கள் போன்ற பணிகளையும் தனியாரிடம் விட முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக டிக்கெட் முன்பதிவு மற்றும் உடனடி டிக்கெட் விற்பனை என இரண்டையுமே தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
அதிக டிக்கெட் விற்பனை மையங்கள்...
தற்போது இ-டிக்கெட் விற்பனைக்கு மட்டும் டிராவல் ஏஜெண்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முன்பதிவு மற்றும் உடனடி டிக்கெட் விற்பனை இரண்டையும் தனியார் வசம் ஒப்படைப்பதன் மூலம் டிக்கெட் விற்பனை மையங்களை அதிகரிக்க முடியும் என ரயில்வே கருதுகிறதாம்.
கூட்டம் குறையும்...
இதனால், தற்போது ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நிற்கும் கூட்டத்தின் அளவு குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அனுபவம் தேவை...
5 ஆண்டு டிக்கெட் விற்பனையில் அனுபவம் உள்ள தனியார் ஏஜெண்டுகள், இந்த கூடுதல் டிக்கெட் விற்பனை மையங்கள் அமைக்க தகுதி உள்ளவர்கள் ஆவார்கள். இவர்கள் ரயில் நிலையங்களுக்கு வெளியே தங்களது டிக்கெட் விற்பனை மையங்களை அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
எதிர்ப்பு...
ஆனால், ரயில்வேயின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மொத்த ரயில்வேயுமே தனியார் வசமாகி விடும் என அவர்கள் காரணம் கூறுகிறார்கள்.
கெட்டப் பெயர்...
மேலும், ஏற்கனவே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட இ-டிக்கெட் விற்பனை உள்ளிட்ட பணிகளில் மக்களிடமிருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் கூடுதல் டிக்கெட் விற்பனை மையங்கள் அமைக்க அனுமதி அளித்தால், ரயில்வேக்குத் தான் கெட்டப் பெயர் வரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications