ஆந்திராவில் கொட்டித் தீர்த்த மழை, பெங்களூரில் லேசாக...
பெங்களூர்: வெயில் கொளுத்தி வந்த நிலையில் பெங்களூர் மற்றும் ஆந்திராவில் மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் துவங்கிய கையோடு வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சூரியன் உச்சத்தில் இருந்த ஆந்திரா மற்றும் பெங்களூரில் மழை பெய்துள்ளது.

ஆந்திரா
ஆந்திராவில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் இன்றும் அங்கு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள்
பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது மழை பெய்ததை பார்த்த மாணவர்கள் சந்தோஷமாக நனைந்து கொண்டே சாலைகளில் நடந்து செல்கின்றனர்.

பெங்களூர்
குளு குளு என்று இருந்த பெங்களூரில் தற்போது சென்னைக்கு போட்டியாக வெயில் அடிக்கிறது. இந்நிலையில் பெங்களூரில் பல இடங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்தது.

மேகமூட்டம்
பெங்களூரில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. வெப்பம் தணிந்து சற்று குளுமையாக இருப்பது பெங்களூர்வாசிகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளது.












Click it and Unblock the Notifications