For Quick Alerts
For Daily Alerts
Just In
2வது நாளாக மாலை நேரத்தில் பொழிந்த மழை.. குளிர்ந்த பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரத்தில் மழை கொட்டியது.
கோடை ஆரம்பித்த நிலையில், பெங்களூரில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் நகரம் சற்று குளிர்ந்தது. இன்று பகலில் வெயில் அடித்த நிலையில், மாலை 6 மணிக்கு மேல் நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
ஹெப்பால், நாகரவரா, கேஆர்புரம், கோரமங்களா, ஜெயநகர், மடிவாளா, பொம்மனஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்தது. மின்னலுடன் இடியும் காணப்பட்டது.
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் பெங்களூரில் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்திலும் இன்று மாலை மிதமான மழை பெய்தது.
Comments
English summary
Rain lashes Bengaluru at the evening. Jayanagar, Madivala, Bomamanahalli, Nagavara areas receives good rain fall.
Story first published: Friday, March 16, 2018, 18:52 [IST]