பெங்களூர் வெள்ளம்: தீவுபோல மாறிய வீடுகள்.. படகில் சென்று உணவு வழங்கிய தீயணைப்பு படையினர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கடந்த ஒரு வாரமாக, பெங்களூரில் தினமும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு, விடிய, விடிய மழை பெய்தது.

சுமார் 4 செ.மீ அளவுக்குதான் மழை பெய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், விடாமல் பெய்து கொண்டிருந்தது. இதனால் நகரிலுள்ள பல ஏரிகளில் இருந்தும் தண்ணீர் பெருக்கெடுத்து ஊருக்குள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.

மழை இன்னும் 3 நாட்களுக்கு பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

பொம்மனஹள்ளி மண்டலம்

பொம்மனஹள்ளி மண்டலம்

பொம்மனஹள்ளி மண்டலத்தில்தான் வெள்ளத்தால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. கோடிச்சிக்கனஹள்ளி, பிலேகஹள்ளி ஆகிய பகுதிகள் முழுமையாகவும், ஒங்கசந்திரா ஏரியாவில் ஓரளவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

படகுமூலம் வினியோகம்

படகுமூலம் வினியோகம்

மேற்கண்ட பகுதிகளில் தரைத்தளத்தில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்துவிட்டதால் மாடிகளுக்கு அவர்களை ஷிப்ட் செய்தனர் தீயணைப்பு அதிகாரிகள். சாப்பாடு இன்றி தவித்தவர்களுக்கு படகு மூலம் சாப்பாடு வினியோகம் செய்தனர்.

பல துறையினர்

பல துறையினர்

150க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் அவசர பிரிவு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் மாநகராட்சி, மின்துறை ஊழியர்களும் கை கோர்த்துள்ளனர்.

மீட்பு பணிகள்

மீட்பு பணிகள்

வெள்ள நீரை வெளியேற்ற ராட்சத பம்புகள் கொண்டுவரப்பட்டு நீர் அகற்றப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடைபெறும் மீட்பு பணிகளை தொகுதி எம்.எல்.ஏக்களும், கவுன்சிலர்களும் மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+