ஓ.பி.சி. கிரீமிலேயர் உச்ச வரம்பை ரூ10.5 லட்சமாக உயர்த்த அதிரடி பரிந்துரை!!
டெல்லி: மத்திய அரசின் நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) இடஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்ச வரம்பை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ10.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசின் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு மண்டல் குழு பரிந்துரைப்படி 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் முன்னேறியவர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக 1993ல் ஆண்டுக்கு ரூ1 லட்சம் வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இந்த உச்சவரம்பு 2004 ஆம் ஆண்டு ரூ2.5 லட்சமாகவும் 2008ஆம் ஆண்டு ரூ 4. 5 லட்சமாகவும் 2013ஆம் ஆண்டு ரூ6 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டது.
அதுவும் 2013ஆம் ஆண்டே பிறபடுத்தப்பட்டோர் ஆணையம் இந்த உச்சவரம்பை நகர்ப்புறங்களில் ரூ12 லட்சம், கிராமப்புறங்களில் ரூ 9 லட்சம் என நிர்ணயிக்க பரிந்துரைத்திருந்தது. ஆனால் இதை நிராகரித்திருந்த மத்திய அரசு ஒரே அளவாக ரூ6 லட்சம் என உயர்த்தியிருந்தது.
தற்போது இந்த உச்சவரம்பை ரூ10.5 லட்சமாக உயர்த்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தம்மை பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இந்த கோரிக்கையை ஏற்கக் கூடும் என்றே தெரிகிறது. அதுவும் இந்த ஆண்டின் இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்றால் பிற்படுத்தப்பட்ட சமூகம் நிறைந்திருக்கும் அம்மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு அப்பால் இந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய அரசின் நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெருமளவில் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications