For Quick Alerts
For Daily Alerts
Just In
மோடி மீது ராஜ்தாக்கரே கடும் தாக்கு- முதல்வர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்!!
மும்பை: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே சாடியுள்ளார்.
இது தொடர்பாக ராஜ்தாக்கரே, எங்கே போனாலும் மோடி குஜராத் பற்றி மட்டுமே பேசுகிறேன். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதுதான் நல்லது. அப்பொழுதுதான் தேசிய பிரச்சனைகளைப் பற்றி பேசுவார் என்றார்.
பாஜக பதிலடி
இதற்கு பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திரா கூறுகையில், மோடி எப்போதுமே தேசிய பிரச்சனைகளைத்தான் பேசுகிறார். ராஜ் தாக்கரேயின் அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை என்றார்.
Comments
English summary
Maharashtra Navnirman Sena (MNS) chief Raj Thackeray today dared Narendra Modi to quit as Gujarat chief minister after entering the race for the Prime Minister's post.
Story first published: Thursday, January 9, 2014, 18:04 [IST]