ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் 2023: பாஜக மலை போல் நம்பும் அரச குடும்ப பெண்! யார் இந்த வசுந்தரா ராஜே?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் அக்கட்சி மலை போல் நம்பி இருக்கும் பெண் வசுந்தரா ராஜே!
ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபையின் பதவிகாலம் முடிவடையவுள்ளதால் வரும் 25 ஆம் தேதி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி ஆகும். இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இதற்காக 156 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அது போல் பாஜக மட்டும் என்ன சும்மாவா! அவர்களும் 184 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 72 இடங்களில் பாஜக வென்று எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆவார். கடந்த 2013 ஆம் ஆண்டு வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.
இந்த முறையும் வசுந்தரா ராஜேவையே பாஜக நம்பியுள்ளது. ராஜஸ்தானை பொருத்தவரை வசுந்தரா ராஜேதான் அனைவரும் அறிந்த தலைவராக உள்ளார். எனவே அவரை முதல்வர் வேட்பாளராக்கி தேர்தலில் வெல்ல பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதற்கு முன்பு யார் இந்த பெண் என்பதை பார்ப்போம்.
வசுந்தரா ராஜே சிந்தியா அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவரது குடும்பம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரை ஆட்சி செய்தவர்கள். அவருடைய தாய் விஜயராஜே சிந்தியா பாரதீய ஜன சங்கத்தில் முக்கிய தலைவராக இருந்தார். அதன் பின்னர் பாஜகவில் இணைந்தார். வசுந்தராவின் சகோதரர் மாதவ ராவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
வசுந்தரா 1984 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை பாஜகவில் தொடர்ந்தார். அவர் மெதுவாக முன்னேறி 1985 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பாஜக இளைஞரணி துணைத் தலைவர் பதவியை பெற்றார். இரு ஆண்டுகள் கழித்து ராஜஸ்தான் மாநில பாஜக துணைத் தலைவராக இருந்தார். 2003 ஆம் ஆண்டு வரை அவர் பல்வேறு முறை லோக்சபா தேர்தல்களில் வென்றுள்ளார்.
இதையடுத்து 2003 ஆம் ஆண்டு அவர் ராஜஸ்தான் மாநில அரசியலுக்கு திரும்பினார். ராஜஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற சாதனையை படைத்தார். வசுந்தரா, ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் அரசு குடும்பத்தின் தலைவர் ஹேமந்த் சிங்கை 1972 ஆம் ஆண்டு மணந்தார். அவர்களுக்கு துஷ்யந்த் சிங் என்ற மகன் உள்ளார். அவர் வசுந்தரா முன்பு போட்டியிட்ட ஜலாவார் தொகுதியின் எம்பியாக உள்ளார் துஷ்யந்த். மும்பையில் சோபியா பெண்கள் கல்லூரியில் வசுந்தரா பொருளாரத்திலும் அரசியல் அறிவியலிலும் பட்டம் பெற்றார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள்












Click it and Unblock the Notifications