ராஜஸ்தானில் பாஜக அமோக வெற்றி பெறும்! டிவி9 கருத்துக்கணிப்பு! காங்கிரஸ் கரைசேர வாய்ப்பில்லையாம்!
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 100 முதல் 110 தொகுதிகள் வரை பெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என TV9 Pollstrat நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 90 முதல் 100 இடங்கள் வரை பெறலாம் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே நடந்த கோஷ்டிப்பூசலே இத்தகைய பின்னடைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவை. கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே காங்கிரஸ் நூலிலையில் தான் ராஜஸ்தானில் வெற்றிபெற்றது.

கிடைத்த வெற்றியை தக்க வைக்க காங்கிாஸ் போராடி வரும் நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸாரை கலக்கம் அடைய வைத்துள்ளன. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தியா குமாரி, பாலக் நாத், கிரோடி லால் மீனா என பல நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியதன் மூலம் ராஜஸ்தானின் பாஜக வெற்றியை அறுவடை செய்யவுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பாஜக திரும்ப திரும்ப பிரதானமாக முன்வைத்து பிரச்சாரம் செய்தது அக்கட்சிக்கு பலன் கொடுத்துள்ளது. ராஜஸ்தானை பொறுத்தவரை எப்படியும் வெற்றிபெற வேண்டும் என காங்கிரஸ் -பாஜக ஆகிய இரண்டு கட்சிகள் தலைமையும் கடுமையாக போராடின. டிவி 9 கருத்துக்கணிப்பில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு 90 இடங்களுக்கு மேல் கிடைக்கும், ஆனால் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ், ஜான்கிபாத் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில் ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிகபட்சம் 85 தொகுதிகளை தாண்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் திட்டவட்டமக தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications