எங்கம்மாவ பாத்துக்க முடியாதா?... 2 பொண்டாட்டியையும் காரோடு கொளுத்திய மஹாபுருஷன்!
தன்னுடைய தாயாரை பார்த்துக்கொள்ள முடியாதா என்று ஆத்திரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தன்னுடைய இரண்டு மனைவிகளையும் காரோடு வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : தன்னுடைய தாயாரை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள முடியாதா என்று ஆத்திரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தன்னுடைய இரண்டு மனைவிகளையும் காரில் வைத்து உயிரோடு கொளுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த தீபா ராம் என்பவருக்கு டேரியா தேவி, மாலி தேவி என்று இரண்டு மனைவிகள். இவர்கள் இரண்டு பேரையும் நகை வாங்கித் தருவதாகச் சொல்லி தீபா ராம் அழைத்து சென்றுள்ளார். அப்போது குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மனைவிகளுடன் பேசி வந்துள்ளார் தீபா ராம்.

அப்போது கடுமையான வாக்குவாதம் எழுந்த நிலையில் ஓடும் காரிலேயே சத்தம்போட்டு கத்தியுள்ளார் தீபா ராம். அந்த சமயத்தில் தீபாராமின் மனைவிகள் காரில் இருந்து தப்பித்து மக்களின் உதவியை நாட முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களை சமாளித்து காருக்குள் தள்ளி மீண்டும் காரை ஓட்டிச் சென்றுள்ளார் தீபா ராம்.
சிறிது தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ள தீபா ராம், ஒரு கட்டத்தில் காரை நடுவழியிலேயே நிறுத்திவிட்டு இரண்டு மனைவிகளையும் காருக்குள் வைத்து பூட்டி, காருக்குத் தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தின் போது தீபாராமின் மனைவிகள் இருவரும் காரின் சீட்டில் அமர்ந்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் தீபா ராம் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். இதனையடுத்து தீபா ராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய தாயாரை நல்லபடியாக வைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்னை எழுந்ததால் ஆத்திரத்தில் இதனை செய்ததாக அவர் ஒப்புகொண்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தீபா ராம் குஜராத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications