அரசு பள்ளி வளாகத்திற்குள் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: ஆசிரியர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு பள்ளி வளாகத்திற்குள் 8ம் வகுப்பு பள்ளி மாணவியின் ஆடைகளைக் கிழித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள சுன்சுனு மாவட்டத்தில் உள்ள சுகானா-ஜோகத் கிராமத்தில் சமஸ்கிருத ப்ரவேஷிகா என்ற அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 19ம் தேதி இப்பள்ளியின் ஆசிரியரான ஹவா சிங், அங்கு 8ம் வகுப்பு படித்து வரும் மாணவியை பள்ளியின் மதிய உணவுக்கூடத்திற்குள் உணவு சமைக்க வேண்டும் என்று கூறி அழைத்து அச்சிறுமியின் ஆடைகளைக் கழற்றியுள்ளார். சிறுமி தடுக்கவே, ஆடைகளை கிழித்து எறிந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

பயத்தில் அழுத சிறுமியை அடித்து மிரட்டியுள்ளார் அந்த காமுகன் ஹவா சிங், பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் கூறியதை அடுத்து ஹவா சிங் தலைமறைவானார்.
இந்த சம்பவத்தைக் கேட்டு கொதித்தெழுந்த கிராம மக்கள் ஆசிரியரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 20ம் தேதி அந்த ஆசிரியர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாகியிருந்த ஹவா சிங்கை நேற்று போலீசார் கைது செய்து, சிறார் வன் கொடுமை தடுப்பு சட்டம்(POCSO) உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சட்டத்தின் படி பாலியல் பலாத்காரத்திற்கான முயற்சி பாலியல் பலாத்காரமாகவே கணக்கில் கொள்ளப்படும்.
கைது செய்யப்பட்ட ஹவா சிங்கை போலீசார் உள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விரைவில் சிறுமியின் வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியர் மீதான தண்டனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications