அரசு பள்ளி வளாகத்திற்குள் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: ஆசிரியர் கைது

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு பள்ளி வளாகத்திற்குள் 8ம் வகுப்பு பள்ளி மாணவியின் ஆடைகளைக் கிழித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள சுன்சுனு மாவட்டத்தில் உள்ள சுகானா-ஜோகத் கிராமத்தில் சமஸ்கிருத ப்ரவேஷிகா என்ற அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 19ம் தேதி இப்பள்ளியின் ஆசிரியரான ஹவா சிங், அங்கு 8ம் வகுப்பு படித்து வரும் மாணவியை பள்ளியின் மதிய உணவுக்கூடத்திற்குள் உணவு சமைக்க வேண்டும் என்று கூறி அழைத்து அச்சிறுமியின் ஆடைகளைக் கழற்றியுள்ளார். சிறுமி தடுக்கவே, ஆடைகளை கிழித்து எறிந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

Rajasthan: Teacher arrested for bid to rape minor

பயத்தில் அழுத சிறுமியை அடித்து மிரட்டியுள்ளார் அந்த காமுகன் ஹவா சிங், பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் கூறியதை அடுத்து ஹவா சிங் தலைமறைவானார்.

இந்த சம்பவத்தைக் கேட்டு கொதித்தெழுந்த கிராம மக்கள் ஆசிரியரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 20ம் தேதி அந்த ஆசிரியர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாகியிருந்த ஹவா சிங்கை நேற்று போலீசார் கைது செய்து, சிறார் வன் கொடுமை தடுப்பு சட்டம்(POCSO) உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சட்டத்தின் படி பாலியல் பலாத்காரத்திற்கான முயற்சி பாலியல் பலாத்காரமாகவே கணக்கில் கொள்ளப்படும்.

கைது செய்யப்பட்ட ஹவா சிங்கை போலீசார் உள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விரைவில் சிறுமியின் வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியர் மீதான தண்டனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+