ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி
டெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்தது யார் என்று அறிக்கையில் தெரிவிக்காதது ஏன் என்று எம்டிஎம்ஏவிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது குண்டுவைத்து வெடிக்கச் செய்து படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்தது.

ராஜீவ் காந்தி கொலை சதித் திட்டத்தின் பின்னணி குறித்து விசாரிக்க 1999ஆம் ஆண்டு எம்டிஎம்ஏ (Multi Disciplinary Monitoring Agency) என்ற விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டுச் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் 1999ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அர்ஜூன்சிங் பாஜக மூத்தத் தலைவர் அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் எம்டிஎம்ஏ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்டிஎம்ஏ என்பது தனி அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட வேண்டும் என்றும் அர்ஜூன்சிங் கோரியிருந்தார்.
இந்நிலையில் எம்டிஎம்ஏ விசாரணை அறிக்கையை கோரி ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையிலுள்ள பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது எம்டிஎம்ஏ அறிக்கையில் ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்படாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் எம்டிஎம்ஏ அறிக்கையில் வெடிகுண்டு குறித்து 17 ஆண்டுகளாக நடத்தும் விசாரணையில் ஏன் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதுவரை எம்டிஎம்ஏ நடத்திய விசாரணையின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Recommended Video

ஆகஸ்ட் 23க்குள் எம்டிஎம்ஏ தனது முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் உள்ள பேரறிவாளன் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சிறையில் உள்ளார். பேட்டரி வாங்கி கொடுத்தவர் சிறையில் இருக்கும் நிலையில் வெடிகுண்டு தயாரித்தது யார் என்று இது வரை விளக்கம் அளிக்கப்படாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளதால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications